Author name: Peace

இறைதேடல்

knowing the Creator of the universe ஏன் உலகின் சிருஷ்டிகர்த்தாவை அறிந்து கொள்வதற்கு நாம் சிந்திப்பதும், ஆராய்வதும் அவசியம்? 1. இருப்பைக் கொண்டமைந்த இப்பிரபஞ்சத்தை அறிவதற்கும், தெரிந்து கொள்வதற்குமான ஆத்ம-ஈடுபாடு எங்கள் அனைவரிடத்திலேயும் இருக்கிறது. உண்மையில் நாம் அனைவரும் அறிந்துகொள்ள விரும்புதெல்லாம், அழகிய நட்சத்திரங்களுடன் உயர்ந்து தென்படும் ஆகாயம், மனதைப் பறிக்கும் காட்சிகளைப்பெற்று விரிந்து காணப்படும் இப்பூமி, பலவண்ணமயமான படைப்புக்கள், அழகிய பறவைகள், பல்வேறு மீன் இனங்கள், கடல்கள், மலைகள், பூஞ்செடிகள், வானைத் தொட்டு நிற்கும் […]

இறைதேடல் Read More »

மூன்றாம் ஒளியின் பிறந்த நாள் வாழ்த்து

  ஷஃபான் 03ம் நாளை முன்னிட்டு… மனித விடுதலை பெற்றநாள் இது நண்பர்களை இனம் கண்ட நாள் இது உண்மையான கொண்டாட்டம் பெற்றநாள் இது கருணையான ஷஃபான் மாதம் இது மஃசூம்களின் இதயம் மகிழ்ச்சியில் மூழ்கிய நாள் இது ஷஃபான் மாதத்தின் மூன்றாம் நாள் இது உணர்வுகள் உணர்ச்சி பெற்ற நாள் இது கண்ணியம் தலைதூக்கிய நாள் இது தன் கருணையை இறைவன் வழங்கிய நாள் இது மேகங்கள் குடையாய் மாறிய நாள் இது நிலவுகள் ஒளியை

மூன்றாம் ஒளியின் பிறந்த நாள் வாழ்த்து Read More »

இலௌகீக அரசியலுக்கும், ஆன்மீக எழுச்சிக்கும் மத்தியில் இமாம் ஹுஸைனின் போராட்டம் 02

  அபூ ஆஷிக் ஹுஸைன் சமாதான ஒப்பந்தமா? சத்தியப் போராட்டமா? இமாம் ஹஸன் (அலை) அவர்கள், அப்போதிருந்த சூழமைவுகளுக்கு ஏற்ப உமையா ஆட்சிக்கு எதிராகப் போராடாது, நிபந்தனைகளின் அடிப்படையிலான ஒரு ஒப்பந்தத்தின் மூலமாக தமது ஆட்சியை விட்டுக் கொடுத்திருந்தார். என்றாலும், அதைப்போன்று இமாம் ஹுஸைனும் விட்டுக் கொடுக்காது, இந்த போராட்டத்தில் இறங்கினார் என்றால் நிச்சயமாக தீர்க்கதரிசியின் வாரிசான அவர், பல நலவுகளை அதிலே உறுதியாகக் கண்டிருந்தார். இமாம் ஹஸன் (அலை) அவர்கள், தமது ஆட்சியை முஆவியாவுக்கு விட்டுக்கொடுத்தார்

இலௌகீக அரசியலுக்கும், ஆன்மீக எழுச்சிக்கும் மத்தியில் இமாம் ஹுஸைனின் போராட்டம் 02 Read More »

ஏழாம் அமர்வு – தொடர் 02

நஜ்ரான் நகர கிறிஸ்தவர்களுடனான இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கலந்துரையாடல் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள், இஸ்லாத்தின் பால் நஜ்ரான் நகர கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு விடுத்ததும், சையித், ஆகிப், ஜாஷிலீக் மற்றும் எழுபதுக்கும் அதிகமான அம்மதப் பெரியார்கள், சுமார் முன்னூறு பேர்கள், தமது ஆதரவாளர்களுடன் மதீனா நகருக்கு வந்திருந்தனர். இவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களுடனான அறிபூர்வமான உரையாடலில் ஈடுபட்டபோது, அண்ணலாரின் விரிவான, காத்திரமான நிரூபணங்களின் முன்னே பதிலற்றுப் போய்விட்டனர். ஏனெனில், கிறிஸ்தவர்களின் கையிலிருந்த அதிகாரபூர்வமான கிரந்தங்களிலிருந்தே இறைத்தூதர் முஹம்மத்

ஏழாம் அமர்வு – தொடர் 02 Read More »

மப்அஸ் திருநாள்

ரஜப் 27ம் நாளை முன்னிட்டு… இங்கணம் ஹிராவில் இருந்தீரே ஜிப்ராயிலை கண்டு மகிழ்ந்தீரே ஓதுவீரே என்பதற்குக் கட்டுப்பட்டீரே ‘அலக்’கை கண்ணீர் மழ்க ஓதினீரே அதுவே இறை உடன்படிக்கையின் கடவுச் சொல்லானதே அதனையே எடுத்துக் கூறி, ‘எம் நபியே’ என்ற அழைக்கப்பட்டீரே எம் இதயத் துடிப்புக்கள் உம்மை யா முஹம்மது! யா நபியல்லாஹ்! என்றழைக்கிறது வானவர்கள் இந்நாளுக்காய் கவிபாடி வாழ்த்துக் கூறுகிறார்கள் நட்சத்திரம் அகிலத்தை தனது ஒளியால் அலங்கரிக்கிறது இந்நாளே மனித இதயங்களின் வசந்தம் இதுவே தனது பெருமை

மப்அஸ் திருநாள் Read More »

உண்மையான கண்ணியம் எது?

  இமாம் ஜஃபர் ஸாதிக் (அலை) அவர்கள் கூறினார்கள்: இறைவன் ஒருவரை, பாவமான இழிநிலையிலிருந்து வெளியேற்ற விரும்பினால் அவரை ‘தக்வா’ எனும் கண்ணியமான நிலைக்குள் நுழைவித்து விடுகிறான். மேலும், பணம் மற்றும் பொருளின்பால் தேவையற்றவராக அவரை மாற்றி விடுகிறான். அவ்வாறே, அவருக்கு உறவுகளில்லாத போதும்கூட கண்ணியத்தையும், துணையில்லாத போதும்கூட மன அமைதியினையும் அவருக்கு வழங்குகின்றான். (மன்லா யஹ்லுருஹுல் பகீஹ்: பாகம் 04, பக்கம் 410) ஆன்மீகத்தலைவர் இமாம் காமினியின் விளக்கவுரையிலிருந்து… பாவம் என்பதே இழிநிலைதான். அதிலும், இறைவனின்

உண்மையான கண்ணியம் எது? Read More »

துன்பத்தின் வாயில்

துன்பத்தின் வாயில் இமாம் சாதிக் (அலை) அவர்கள் அருளினார்கள்: எந்த வீட்டில் குர்ஆன் ஓதப்படாமலும், அல்லாஹ்வைப் பற்றிய சிந்தனை இல்லாமலும் இருக்கிறதோ, அந்த வீட்டில் மூன்று விடயங்கள் உருவாகிவிடுகின்றன: 1) அவரின் சௌபாக்கியம் (பரகத்) குறைந்துவிடுகிறது. 2) வானவர்கள் அந்த வீட்டை விட்டும் விலகிச் சென்றுவிடுகிறார்கள். 3) அவ்வீட்டினுள்ளே ஷைத்தான் நுழைந்து விடுகிறான். (இதன் மூலம் சர்ச்சைகளையும், பிரச்சினைகளையும், வேற்றுமைகளையும் ஷைத்தான் உருவாக்கிவிடுகிறான்). (அல் காபீ, பாகம் 2, பாகம் 499, ஹதீஸ் இலக்கம் 01)

துன்பத்தின் வாயில் Read More »

Scroll to Top
Scroll to Top